Sunday, September 26, 2010

நம்ம ஊரு (திருப்பூர்) ஸ்பெசல் உணவுகள் (அசைவம்)+(சைவம்)

இது நம்ம திருப்பூருக்கு வெளியே

பெருமாநல்லூர் to பெருந்துறை வழியில் உள்ள ஒரு ரெஸ்ட்டாரண்ட்.

பெருமாநல்லூரில் இருந்து பெருந்துறை செல்லும் போது 1 KM தாண்டி ROAD RIGHT SIDE இரண்டாவது ரெஸ்ட்டாரண்ட்(பெயர் மறந்துவிட்டேன்). இன்னொரு அடையாளம் ரெஸ்ட்டாரண்ட் மறுபுறம் வயல் இருக்கும்.

இங்கே எல்லா வகை உணவுகளும் மிக அருமையாக இருக்கும், குறிப்பாக கல் தோசையும் எலும்பு குழம்பும் மிக நல்ல காம்பினேசன். அப்புறம் எல்லாம் சாப்பிட்டு கடைசியாக PLAIN RICE-ம் தயிரும் சாப்பிட்டு பாருங்கள். உங்களுடைய விமர்சனத்தை எதிபார்க்கிறேன்.

பி.கு: குடும்பத்தினர்களுடன் சாப்பிட்டு மகிழ மிக நல்ல இடம் ( வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தொந்தரவு இல்லை)

Monday, April 26, 2010

நம்ம ஊரு (திருப்பூர்) ஸ்பெசல் உணவுகள் (சைவம்)

இது இட்லி தோசை விருப்பி சாப்பிடுவர்களுக்கு...
ஆத்தா கடை ... புஸ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப்பில்.. உள்ள கீதா மெடிக்கல்.. ஸ்லீக்(cheppal mart) இடையே உள்ள வீதியில் கடைசி (corner shutter)வடக்கு பார்த்த கடை... இங்கு இட்லி மற்றும் தோசை மட்டுமே கிடைக்கும்... அதற்கு தொட்டுக்க சட்னியும், சாம்பாரும்.... அடிச்சுக்கவே முடியாத taste...
யாவருக்கும் ஒத்துவரும் நல்ல டிபன் ....

குறிப்பு : இது மாலை நேர உணவகம் (6 மணி முதல் 8 மணி வரை)

Sunday, March 7, 2010

நம்ம ஊரு (திருப்பூர்) ஸ்பெசல் உணவுகள் (அசைவம்)

புதியதாக நம்ம ஊருக்கு வருபவருக்கும்...,
நம்ம ஊருலேயெ இருந்துகிட்டு தெரியாதபவர்களுக்கும்....,
இந்த சாப்பாட்டு பதிவு....
(தெரிந்திருந்தால் மன்னிக்கவும்)

அசைவ உணவு பிரியர்களுக்கு.......
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் மணிக்கூண்டு சிபி நகைகடைக்கு அருகில்
ஓரு விநாயகர் கோயில்... அதன் சின்ன சந்தில் ஓரு கடை...
அதில் சிந்தாமணி சிக்கன் என்னும் மிளகாய் கறி கிடைக்கும். கூடவே சாப்பாடும்..
(அல்லது புரோட்டா) மிக நன்றாக இருக்கும்..

இது வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் அல்சர் உள்ளவர்களுக்கும் பொருந்தாது. (முக்கியமாக காரம் விரும்பாதவர்களுக்கும்.)

Sunday, February 14, 2010

தி பாக்ஸ்

த பாக்ஸ் படம் ஓரு இனிய காலைப்பொழுதில் தொடங்குகிறது. மறைந்திருக்கும் பல மர்மங்களை தாண்டி...அழைப்புமணி ஓசை, கதவை திறந்தால் ஒரு பெட்டி! இப்படித்தான் படம் தொடங்குகிறது. கணவன் மனைவி அவர்களின் மகன் வால்டர் மூவரும் திறந்து பார்கின்றனர். உள்ளே நம்ம சன் டிவி-ல் வரும் டீலா நோ டீலா புரோகிராம்-ல் அமுத்தும் பட்டன் மாதிரியே அதிலும் இருக்கிறது. கூடவே ஒரு லெட்டர் மாலை 5 மணிக்கு ஸ்டுவர்ட் வந்து பார்ப்பார் என்றும் இருக்கிறது.
அவள் வேலை செய்யும் பள்ளியின் முதல்வரிடமிருந்து முதல் அதிர்ச்சி.. காத்திருக்கிறது, பிறகு அவள் கணவனுக்கும், அவன் வேலை செய்யும் நாசா-லும் அதிர்ச்சி தொடர்கிறது.

இந்த சுழ்நிலையில் அவர்கள் அந்த பட்டணை அழுத்தினார்களா? இல்லையா? அதன் பின் விளைவுகள் என்ன? என்பதை மிக அருமையாக கதை அமைத்திருக்கிறார்கள்.

நொடிக்கு நொடி பிரேம் பை பிரேம் சஸ்பென்ஸ்..முடிந்தால் பாருங்கள்

Thursday, July 23, 2009

அப்பா அம்மாவின் கனவு .....

நமது அப்பா அம்மாவின் கனவு என்ன என்று நாம் எப்போதாவது யோசித்தது உண்டா?... அதுதான் இங்கே எழுத்துகளாக....

எல்லா பெற்றோரும் தம்முடைய பிள்ளைகள் தாம் பட்ட கஷ்டமில்லாமல் முதலில் நல்ல குழந்தைகளாக, ஒரு நல்ல மாணவனாக, பிறகு எல்லோராலும் பெருமையாக பேசப்படும் ஒரு நல்லவனாக ஆகவேண்டும் என்பதே அவர்களின் கனவாக இருக்கும்(அது ஒரு டாக்டர், engineer, Business Man, Teacher, விளையாட்டு வீரனாக..... இன்னும் எத்தனயோ கனவுகள்). அதற்காக அவர்கள் பட்ட கஷ்டம் என்னவென்று என்றாவது நம் நினைத்து பார்த்து உண்டா ....

முதலில் குழந்தை பருவம்....

ஓவ்வொரு நாளும் நாம பன்னின குறும்புகளையும் அடாவடிதனதையும் ரசிச்சுக்கிட்டு நமளோட சிரிப்பில் உலகையே மறந்துகிட்டு இருபாங்க.. நாம பிறக்கும் போது தடுப்புசி அப்படிகிற பெயருலே ஒரு பெரிய லிஸ்ட்ல கொடுப்பங்க .....அதை ஓவ்வொரு தடவையும் மறக்காம கால்களுக்கு நல்ல செருப்பு வாங்காமல்... நல்ல துணி நமக்கு வாங்கிட்டு அவுங்க அழுக்கு துணி உடுத்திக்கிட்டு ....நம்ம மேல காத்து வெயில் படமா இருக்க ஒரு துண்ட போர்த்திகிட்டு ... கவ்வெர்மெண்டு ஆஸ்பத்திரில போட்டா எதாவது குழந்தைக்கு ஆய்டும் பயந்துகிட்டு .... தனியார் ஆஸ்பத்திரில கேக்கிறே அநியாய காச கொடுத்தாலும் மனதில் குழந்தைக்கு நல்ல ஊசி போட்டோம் திருப்தியோட சந்தோசமா நம்மல கூட்டிகிட்டுவருவங்க..

நடக்க பேசிபலக ஆரபிச்சபிறகு ..

அம்மா எனக்கு அது விளையாட வேணும்... அப்பா எனக்கு இது விளையாட வேணும் ... ஆரம்பிச்சு எல்லை இல்லாமல் கேட்போம்., அவங்க குழந்தையா இருக்கும் போது கேட்டு கிடைக்காதப்ப எப்படி வருத்தபட்டாங்கலோ அதை நம்ம குழந்தைகளும் FEEL செய்ய கூடாதுன்னு அவங்க நால முடிந்த அளவு நமக்கு வாங்கிதந்திருபாங்க....... இருந்தாலும் நாம அவங்க கிட்ட கேட்டு அடம் பிடிப்போம். நம்மளோட சின்ன ஆசைகளைகூட அவிங்க நிறைய கஷ்டப்பட்டு நிறைவேற்றிருப்பங்க.

பள்ளிக்கூடம் போனதும் நாம சொல்கிற பாடத்தை பார்த்து பூரிப்படையறதும் என் பொண்ணு / பையன் இந்த rhyms சொல்வா(ன்) அந்த rhyms சொல்வா(ன்) பெருமைபடறதும் அவங்கதான்.

இன்னும் கொஞ்சம் பெரியவனானதும் நம்மளோட அண்ணனுக்கோ அக்காவிற்க்கோ வாங்கி தந்ததை நாம கேட்கிறப்போ நம் பெற்றோரிடமிருந்து நீயும் பெரியவனாகு உனக்கும் வாங்கி தருகிறோம் என்ற பதில் வரும்முனே அதுவரைக்கும் நீங்க உயிரோடு இருபிங்களோ என்னவோன்னு வார்த்தைகளால் அவர்களை கொள்வோம்.

இப்படிஎல்லாம் வளர்த்தி பெற்றோர் படி படி சொன்னப்ப சிலர் படிதும் சிலர்படிக்காமலும் சிலர் பெற்றோர் விருப்படி வேலைக்கு போயும் சிலர் தம் விருப்படி வேலைக்கு போயும் இன்னும் சிலர் கிடைத்த வேலைக்கு போயும் மனிதனாக மாறிவிடுகிறோம்.

ஆனால் காலபோக்கில் நாம் வளர்த்தவர்களை மறந்து விடுகிறோம் எதாவது நமக்கு வேண்டும் எனற நேரங்களில் மட்டுமே பேசுகிறோம். அப்போதும் நம்ம குழந்தை கஷ்டப்படுகிரனே எதாவது செய்ய வேணுன்னு FEEL பண்ணுவங்க.

நம்முடைய நேரங்களில் பலவற்றை வேலைகளுக்காகவும், மற்றவைகளை நண்பர்களுக்காகவும் செலவு செய்து விடுகிறோம். என்றாவது ஒரு நாள் நம் பெற்றோருடன் பேசி மகிழதிருக்கிறோமா? இதனை நாள் நமக்கு வேண்டியதை வாங்கி கொடுத்த நம்முடைய அப்பா அம்மாவிற்கு என்ன வேண்டும் என்று கேட்டதுண்டா அப்படி கேட்டாலும் வயதான காலத்தில் எனக்கு என்னடா தேவை இருக்கு? பார் உனக்கு நல்லதா அது இல்லை...! அப்படின்னு கடைசிலே நமக்கும்., நம்மள சுத்தி இருக்கிறவங்களுகும் ஆசைய நிறைவேற்றுவதே அவர்களுடைய எண்ணமா இருக்கும்.

இன்றைய அவசர உலகில் எத்தனை பேருக்கு நம்மளோட அப்பாவோட அப்பா அம்மா பெயரும் அம்மாவோட அப்பா அம்மா பெயரும் தெரியும்? நம்முடைய பழைய நினைவுகளை நாம் அசை போடுவதேயில்லை அதுதான் காரணம்....நம்மளோட அம்மா அப்பாவை சந்தோசபடுத்தனும் அப்படினா அவங்களோட நேரத்தை பகிந்துகொள்ளணும் அது நம்மளோட வாழ்க்கைலே நிறைய அனுபவ பாடத்தை சொல்லி தரும்.

அதுமட்டுமில்லாமல் நம்மளோட அப்பா அம்மாகிட்ட நாம எப்படி வளர்ந்தோம் ... என்ன என்ன குறும்பு பண்ணினோம் ... அவுங்க என்ன கஷ்டப்பட்டு வளர்தினங்கோ .... அவுங்க அப்பா அம்மாகிட்ட எப்படி வளர்ந்தாங்க அப்படிகிறத கேட்டு பழைய நினைவுகளுக்கு அவர்களை அழைத்துபோனால் அவர்கள் மனதில் புதைத்து போன நினைவுகள் எல்லாம் பசுமையாக வெளியே வரும். அவர்களுடைய மனதும் லேசாகும் மிகுந்த சந்தோசமடைவர்கள்.

வயதான காலத்தில் தினசரி நம் அவர்களிடம் மனம் விட்டு பேசுவதே அவர்களை சந்தோசமடைய வைக்கும் என்பதே என் எண்ணம்.
முயற்சிசெய்யுங்கள் உண்மை என்றால் இதில் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.


Wednesday, August 27, 2008

முகமும் முகவரியும் அளித்த உறவுக்கு நன்றியுடன்

உலகையே நம் கைக்குள் அடைத்து வைத்து இருக்கும் இந்த இணையதளம் வழியாக நானும் என் நண்பர்களுடன் இன்று இணைகிறேன்....